மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகள் : இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததா அமெரிக்கா…!
ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கமோ அல்லது அமெரிக்க தூதரகமோ ஈரான் மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்புவதைத் தவிர்க்குமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை.
உரையாடல் எதுவும் நடக்கவில்லை
அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த விடயம் தொடர்பாக எந்த உரையாடலும் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது தூதரகத்தின் சார்பாகவோ யாரும் பேசவில்லை.
சர்வதேச உறவுகள் விடயத்தில் அவதானம்
இலங்கை நிலைமையை கையாளும் போது அதன் சர்வதேச உறவுகளை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கை ஈரானுடன் நீண்டகால உறவுகளைப் பேணுகிறது.

அதேவேளை,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் நாம் உறவுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |