இஸ்ரேல் தாக்கும் தருணத்தில், அமெரிக்கா ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தை!
ஈரானுடன் (Iran) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விரும்பும் அமெரிக்கா (United States) முதலீடு, முடக்கப்பட்ட நிதிகளை விடுவித்தல் உள்ளிட்ட ஆசையைத் தூண்டும் விடயங்களை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் பல பில்லியன் டொலர் முதலீடு உள்ளிட்டவையும் வாக்குறுதி அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் (Israel) மற்றும் ஈரானுக்கும் இடையே சமீபத்திய இராணுவத் தாக்குதல்கள் இருந்த போதிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான தகவல்
இந்தநிலையில், வெளியான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளும் மத்திய கிழக்கு அமைச்சர்கர்களும் இரகசியமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, ஈரான் ஒரு போதும் யுரேனியம் செறிவூட்டல் முன்னெடுக்கக் கூடாது என அமெரிக்கா தரப்பு கட்டாயப்படுத்தி வருகின்றது இருப்பினும், ஈரான் தொடர்ந்து மறுத்தும் வருகின்றது.
அணுசக்தி முதலீடு
இந்த நிலையிலேயே 20 முதல் 30 பில்லியன் டொலர் வரையில் பொது நலனுக்கான அணுசக்தி திட்டத்தில் முதலீடு, தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து ஆறு பில்லியன் டொலர் வரையில் பயன்படுத்தும் அனுமதி உள்ளிட்டவையை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இது மட்டுமின்றி, அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை மறுகட்டமைப்புக்கு உதவுவதாகவும் அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
