ஈரான் உடனான வணிக உறவின் எதிரொலி: சீனாவுக்கு ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி
சீனாவைச் சேர்ந்த ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், சுமார் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானுடன் வணிகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் மீது இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் எச்சரிக்கையை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிசக்தி விநியோகம்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான பாரசீக வளைகுடா நீர்வழியான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் நேரடி இராணுவ முற்றுகையை (Naval Blockade) நடைமுறைப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள், ஈரானிய எண்ணெயைக் கையாளும் சர்வதேச நிறுவனங்களைக் குறிவைத்துள்ளன.

ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் சந்திக்கவிருப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உயர்மட்டச் சந்திப்பிற்கு முன்னதாகவே சீன நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் தடைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அமெரிக்கத் தரப்பால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விவாதங்கள் பெய்ஜிங் சந்திப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்