ஈரானை அடித்து அமெரிக்கா: அதிர்ச்சி கொடுத்த ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் (USA) தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , "ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.
அணுசக்தி செறிவூட்டல் வசதிகள்
தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும் என்று கூறினார்.
முதலாம் இணைப்பு
ஈரானில் (Iran) உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா (United States) தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், டரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.
குறித்த பதவில், "ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இப்போது அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன, முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகளின் மிக அழுத்தமாக வீசப்பட்டன.
எமது, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்புகின்றன, நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது, இப்போது அமைதிக்கான நேரம்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
