ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் : அமெரிக்காவிற்கு ஏற்பட்ட படுதோல்வி : கொதித்தெழும் ட்ரம்ப்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டநிலையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
எனினும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்களுக்கு தாமதப்படுத்தக்கூடும் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
முழுமையாக அழிக்கப்படாத அணு நிலையங்கள்
பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மையவிலக்குகள் போன்ற முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.
இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும்
கொதித்தெழுந்த ட்ரம்ப்
இந்த அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப், "வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை" அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் ஆகியவற்றைக் கடுமையாக சாடினார்.
— Donald J. Trump (@realDonaldTrump) June 25, 2025
"ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன," என்று அவர் ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
