உலகை பேராபத்தில் தள்ளப்போகும் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் : புடின் கடும் எச்சரிக்கை
ஈரானின்(iran) அணுசக்தி நிலையங்கள் மீதான "நியாயமற்ற" அமெரிக்க தாக்குதல்கள் உலகை பெரும் ஆபத்தை நோக்கித் தள்ளுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) திங்களன்று கூறினார், மேலும் அவர் எந்த குறிப்பிட்ட தகவலையும் வழங்கவில்லை என்றாலும், இஸ்லாமிய குடியரசின் மக்களுக்கு உதவ முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இன்றையதினம்(23) கிரெம்ளினில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்தபோதே மேற்கண்ட அபாய அறிவிப்பை வெளியிட்டார்.
எந்த அடிப்படையும் இல்லை, நியாயமும் இல்லை
"ஈரானுக்கு எதிரான முற்றிலும் தூண்டப்படாத ஆக்கிரமிப்புக்கு எந்த அடிப்படையும் இல்லை, நியாயமும் இல்லை" என்று புடின் அராக்கியிடம் கூறினார், நெருக்கடியை அமைதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச விரும்புவதாகவும் கூறினார். "எங்கள் பங்கிற்கு, ஈரானிய மக்களுக்கு உதவ நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்."எனவும் தெரிவித்தார்.
“நீங்கள் இன்று மொஸ்கோவில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கடினமான விஷயங்கள் அனைத்தையும் விவாதிக்கவும், இன்றைய சூழ்நிலையிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிப்பது எப்படி என்று ஒன்றாக சிந்திக்கவும் இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.” எனவும் தெரிவித்தார்.
சர்வதேச விதிகளை மீறிய அமெரிக்காவின் தாக்குதல்
ஈரான் வெளியுறவு அமைச்சர், தனது நாடு ரஷ்யாவுடன் “மிக நெருக்கமான மற்றும் நட்பு றவுகளை” கொண்டுள்ளது என்றும், இந்த உறவுகள் “ஒரு மூலோபாய தன்மையை” உருவாக்கியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் “சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளன” என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
