மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான்
ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் இன்று அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஈரானிய ராடர் மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு ட்ரோனை ஈரான் அத்துமீறிச் சுட்டதற்காகவே இந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்
இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து இன்று அதிகாலை ஈரான், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.

இருப்பினும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தங்கள் வான்வெளியில் நுழைந்த ஈரானின் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலேயே அழித்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட பதிவு
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், "ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, அது அமெரிக்காவிற்கும் நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும்.

அமைதியாகக் காத்திருந்து கவனியுங்கள், இறுதியில் எல்லாம் நன்றாக முடியும், எப்போதும் போல!" என்று பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |