ஈரான் போரால் அமெரிக்கா எடுக்கப்போகும் முக்கிய முடிவு! ரஷ்யாவுக்கு அடித்த ஜெக்பொட்
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் தகவலின்படி, ஈரான் உடன் ஏற்பட்ட போரின் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை அவசரமாக பரிசீலிக்கப்படுவதாக தெரியவருகிறது.
குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்லும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டதால் உலக சந்தையில் எண்ணெய் வழங்கல் குறைந்து, கடந்த ஒரு வாரத்தில் விலைகள் அதிகரித்துள்ளன.
இறுதி முடிவு
இந்த நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் , “சில நாடுகளுக்கு மீது நாம் விதித்துள்ள தடைகள் உள்ளன. தற்போதைய நிலைமை சரியாகும் வரை அவற்றை தற்காலிகமாக நீக்கலாம்” என தெரிவித்திருந்தார்.

இதன்படி, அமெரிக்கா கடந்த வாரம் இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்கி, கடலில் ஏற்கனவே இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்தது. ஆனால், தடைகளை எவ்வளவு அளவில் தளர்த்துவது என்ற விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள சூழ்நிலையில் ரஷ்யாவுக்கு அதன் போர் செலவுகளுக்கான நிதி சேர்க்க உதவும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று அதன்போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைன் மீதான போரின் காரணமாகவே அமெரிக்கா முன்னதாக ரஷ்ய எண்ணெய் மீது தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |