ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள அந்நாட்டின் சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைப்பதற்கான செலவு மதிப்பீடுகளை வழங்குமாறு அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் வளைகுடா நாடுகளிடம் கேட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள்
மேலும் தெரிவித்த அவர், முடக்கப்பட்ட ஈரானிய வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஈரான் அமைத்துள்ள பெர்சியன் வளைகுடா நீரிணை ஆணையத்திற்குச் செலுத்தப்படும் எந்தவொரு கட்டணமும், ஈரானிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் நிதியைக் கொண்டே ஈடு செய்யப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் கத்தார் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளில் ஈரானுக்குச் சொந்தமான குறைந்தது 100 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி முடக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |