எதிரி நாடுகளுக்கு கனவாக மாறும் அமெரிக்கா: களமிறக்கப்படும் அதிமுக்கிய ஆயுதம்!
அமெரிக்க இராணுவம், எதிரி ட்ரோன்களை மிக விரைவாக அழிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. இது உயர் சக்தி லேசர் ஆயுதம் (High-Energy Laser - HEL) என அழைக்கப்படுகிறது.
இந்த நவீன ஆயுதம், எதிர்கால போர் சூழல்களில் பாதுகாப்பு உத்திகளை முழுமையாக மாற்றக்கூடிய திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
HII நிறுவனம் உருவாக்கிய இந்த லேசர் அமைப்பு, ட்ரோன்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் புதிய தீர்வாக கருதப்படுகிறது.
ட்ரோன்களின் ஆதிக்கம்
இன்றைய காலத்தில் ட்ரோன்கள் கண்ணோட்டம், கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் அவற்றைத் தடுக்கும் நம்பகமான, உடனடி பதிலளிக்கும் ஆயுதங்கள் தேவைப்படுகிறது.
HEL ஆயுதம், இந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைகிறது.
மிஷன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் கிராண்ட் ஹேகன் தெரிவித்ததாவது, “இந்த லேசர் அமைப்பு, பாதுகாப்புத் துறையின் செயல்திறனை மிக உயர்த்தும். எதிரிகளின் குறுகிய மற்றும் நீண்ட தூரத் தாக்குதல்களை தடுக்க இது பயன்படும்.”
பரிசோதனை
அமெரிக்கா, ஏற்கனவே 50 கிலோவாட் லேசர் ஆயுதத்தை ஸ்ட்ரைக்கர் வாகனங்களில் ஏற்றி சோதனை செய்துள்ளது. தற்போது, மேலும் மேம்பட்ட HEL அமைப்பை விரைவில் பயன்பாட்டில் கொண்டு வர தயாராக உள்ளது.
இந்த அமைப்பு பரிசோதனை வெற்றிபெற்றவுடன், துல்லியமான மற்றும் மின்னல் வேக தாக்குதல்களுடன் எதிரியின் ட்ரோன்களை நாசமாக்கும் திறனை பெறும். இதன் வாயிலாக பாதுகாப்பு செலவுகளை குறைக்கும் வழியும் உருவாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
