யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல்

Jaffna G.C.E.(A/L) Examination
By Sumithiran Mar 04, 2025 06:47 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தமிழ் அறிஞர் கே.பி.முத்தையா அவர்கள் எழுதிய தமிழ் அறிவு என்ற தமிழ் இலக்கண நூல் வடமராட்சி கிழக்கு கோட்டக் கல்வி பிரிவில் உள்ள ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த கல்வி பொது தராதர உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் செல்லத்துரை சிறீஇராமச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு இந்த நூல் வழங்கும் நிகழ்வு கட்டைக் காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, ஆழியவளை தமிழ் கலவன் பாடசாலை, உடுத்துறை மகாவித்தியாலயம், அம்பன் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மணல் காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பலர்

இப்பாடசாலைகளில் கல்வி பொது தராதர உயர்தரத்தில் தமிழ் பாடத்தை கற்கும் 135 மாணவர்களுக்கு இந் நூல் வழங்கப்பட்டது.

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

இந்நிகழ்வில் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் செயலாளர் இரா. துரைரத்தினம், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளருமான அ.சா.அரியகுமார், மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லை நாதன், பாடசாலை அதிபர்களான தவகோபால் யோகலிங்கம், கந்தசாமி சிவநேசன், நடராசா தேவராசா, குமாரவேல் கண்ணதாசன், கணேசமூர்த்தி உதயசீலன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை சிறீஇராமச்சந்திரன் உரையாற்றுகையில், “தமிழ் அறிவை வளர்க்கும் முகமாக வழங்கப்படும் இந்த நூலை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இந் நூல் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்“ என்றார்.

தமிழர் பிரதேசத்தை உலுக்கும் வாள்வெட்டு : யாழில் துண்டாக்கப்பட்ட வியாபாரியின் விரல்கள்

தமிழர் பிரதேசத்தை உலுக்கும் வாள்வெட்டு : யாழில் துண்டாக்கப்பட்ட வியாபாரியின் விரல்கள்

ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்மொழி

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் செயலாளர் இரா.துரைரத்தினம் உரையாற்றுகையில், “நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது. இச் சமகாலத்தில் இருந்த பாளி சமஸ்கிருதம் கிரேக்கம் போன்ற மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை. தமிழ் மொழி இன்று கணனி பயன்பாட்டில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் உள்ளது என்பதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

தாய் மொழி இலக்கணத்தை கற்பதன் மூலம் பிற மொழிகளை இலகுவாக கற்க முடியும். யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு இன்று கல்வி துறையில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு உறுதுணையாக இருக்கும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்“ என்றார்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த கல்விமான்

ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் அ.சா.அரியகுமார் உரையாற்றுகையில், “தமிழ் அறிஞர் கே.பி.முத்தையா வடமராட்சி கிழக்கை சேர்ந்த கல்விமான். இப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு உழைத்த ஒருவர். கவிஞர், எழுத்தாளர், தமிழ் அறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பல்துறை ஆளுமைகொண்ட முத்தையா இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் கல்வித்துறையில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

தமிழ் அறிவு என்ற நூல் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூலாக சேர்க்கப்பட்டிருந்தது. காலத்தால் அழியாத தமிழ் அறிவு என்ற நூல் உயர் தர மாணவர்கள் மட்டுமின்றி தமிழ் இலக்கணத்தை செம்மையாக கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ கூடியது“ என்றார்.

யாழ். செம்மணி புதைகுழி விவகாரம்: இடம்பெற்ற கலந்துரையாடல்

யாழ். செம்மணி புதைகுழி விவகாரம்: இடம்பெற்ற கலந்துரையாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024