சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகளின் எதிர்காலம்! 40 குத்தகைதாரர்களுக்கு வெளியேற உத்தரவு
சுவிட்சர்லாந்தில் (Switzerland) தமிழ் கடைகள் அமைந்துள்ள பகுதியின், கட்டிடங்களில் உள்ள 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை குறித்த அறிவித்தல் வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
லிட்டில் சிறிலங்கா
இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.
பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.
1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது.
விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
