வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Erimalai
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை தீருவிலில் வழமை போன்று இம்முறையும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
பலத்த காற்றுக்கும் மழைக்கும் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள முதலாவது மாவீரர் சங்கரின் (சத்தியநாதன் சிலையடி) நினைவிடத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மாவீரர் தினம் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி