தலித்துக்களின் உரிமைக்காக வன்னி அரசு ஆதரவு குரல்! தி.மு.க வுக்கு பதிலடி
இந்தியாவின் தலித் சமூகத்தினருக்கான உரிமை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.
இதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தி.மு.க கட்சியை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்திருந்தது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும் தலித் சமூகத்தினரை பார்ப்பது கோடட்பாட்டின் அடிப்படையிலா அல்லது பச்சாபாதத்தின் அடிப்படையிலா என வன்னி அரசுவால் கேள்வி எழுப்பப்பட்டது.
வன்னி அரசின் கருத்து
தொடர்ந்து, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசியபோது, “குறிப்பிட்ட தொகுதியில் தலித் இனத்தைச் சேர்ந்தவர்களை தொகுதியில் நிறுத்தினேன் என்று தி.மு.கவினர் பேசுகிறார்கள்.

இது கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? தலித் சமூகத்தினரை பரிதாபத்தின் தோனியில் பார்ப்பதாகத்தான் நான் இதை உணர்கிறேன்.
கடந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்தோம். ஆனால் இந்த தேர்தலில் இரண்டு வி.சி.க. உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்று பேரவைக்கு வந்துள்ளோம்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு அமைச்சரவை பதவி கொடுத்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தந்துள்ளது த.வெ.க. இதுதான் கோட்பாடு.
அதன்படி தி.மு.க. கோட்பாட்டின் அடிப்படையில் பேசவில்லை. பரிதாபத்தின் அடிப்படையில் தான் பார்ப்பதாக கருதுகிறேன்.
சாதி கலவரம்
நான் தென் மாவட்டத்தில் நடந்த சாதி கலவரத்தில் இருந்து பாதிக்கப்பட்ட ஒருவன். அந்த பாதிப்புகளில இருந்து நான் சென்னைக்கு வந்திருக்கிறேன்.
எங்களுடைய தலைவர் திருமாவளவன் இன்றைக்கு கூட ஒரு குழந்தையை அழைத்து வந்து பள்ளியில் விடுவதை போல என்னை வந்து சட்டப்பேரவையில் உங்கள் முன் விட்டுவிட்டு சென்றார்.
இன்றைக்கு கிராமங்களில் சாதி அணுகுமுறை எப்படி இருக்கிறது என்றால் வெள்ளை சட்டை போட்டு வந்தால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்று சொல்வார்கள். புதிய கார் வாங்கி வந்தால் இவனுக்கு வந்த வாழ்வு என்று பார்ப்பர்கள் ” என்று ஆதங்கமாக தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |