நேபாளத்தின் எல்லை தாண்டிய பேரழிவு! காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.
இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்டிய பேரழிவின் அளவை எடுத்துக்காட்டுகிறது.
இதன்படி நேபாளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை
எனினும் எதிர்வு கூறல் தகவல்களின் அடிப்படையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி காணாமல் போன 590 சுற்றுலாப் பயணிகளில், 476 பேர் வெளிநாட்டினர் என்றும், மற்றும் 114 பேர் நேபாள நாட்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 177 இந்தியர்கள், 63 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 25 கனடியர்கள், 8 ஜெர்மானியர்கள், 6 சிங்கப்பூரர்கள் மற்றும் 6 தென்னாப்பிரிக்கர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டப் பேரழிவு ஏற்பட்டு சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு, சீனா-நேபாள வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கையாளும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைமுகமான கியிராங் துறைமுகத்தை சீன அவசரகால மீட்புக் குழுவினர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எல்லைப் பிராந்தியத்தில் உள்ள மற்ற முக்கிய வர்த்தக உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகள் நீண்டகாலம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |