ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதி திட்ட அமைப்பில் இணையப்போவதில்லை என்று வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய நெருக்கடிகள் தொடர்பான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வத்திக்கான் வலியுறுத்தியுள்ளது.
அந்தக் காரணத்தினாலேயே இந்தத் திட்டத்தில் பங்கேற்காதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மறுசீரமைப்பு
காசா பகுதியில் போர் நிறுத்த நிலையை கண்காணித்து, மறுசீரமைப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘அமைதி திட்ட’ அமைப்பை உருவாக்கியதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

Image Credit: PBS
இந்த முயற்சியில் பங்கேற்குமாறு அமெரிக்காவில் பிறந்த முதல்பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் தொடக்கக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. காசா மறுசீரமைப்பிற்காக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டுவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
வத்திக்கான் மறுப்பு
வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் வெளியிட்ட அறிக்கையில், “வத்திக்கான் பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல; அதன் தனித்துவம் வேறுபட்டது.

Image Credit: ExcursionMania
சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. எனவே இந்த அமைப்பில் பங்கேற்க முடியாது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ட்ரம்பின் இந்த முயற்சி ஐக்கிய நாடுகள் சபையின் பங்கையும் அதிகாரத்தையும் பாதிக்கக்கூடும் என்ற கவலை சில நாடுகளால் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |