வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உப்பு நீரில் விளக்கெரியும் கண்கொள்ளா காட்சி
வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கின்ற உற்சவத்திற்காக தீர்த்தக்குடம் முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலே தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலே விநாயகருக்கான வழிபாடுகளை தொடர்ந்து, அம்மனுக்கான வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து தீர்த்தக்குடம் தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்கரை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலே வழிபாடுகள் இடம் பெற்று அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் அங்கு இருக்கின்ற பிரதான சிவாச்சாரியார் அவர்களால் உரிய சம்பிரதாய கிரிகைகள் தொடரப்பட்டு, பாரம்பரியமாக தீர்த்தம் எடுக்கின்றவர்களிடத்திலே கொடுக்கப்பட்டது.
பின்னர், தீர்த்தக்குடம் பாரம்பரியமாக செல்கின்ற பாதைகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரை பெருங்கடலை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
உப்பு நீரில் விளக்கெரிக்கின்ற அதிசயம்.
தீர்த்தக்கரைக்கு சென்று அங்கு கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டதன் பின்னர், நேற்று இரவு காட்டா விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கு மடைபரவி இன்று அதிகாலை வேளையில் உப்பு நீரிலே விளக்கெரிக்கின்ற அதிசயத்தை பக்தர்கள் காணக்கூடியதாக இருந்தது.
எதிர்வரும் நான்காம் திகதி காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஐந்தாம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவமும் மிகச் சிறப்பாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்