வவுனியாவில் ஒரே நாளில் பதிவான கொரோனா மரணங்கள்!
வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் மட்டும் வவுனியாவில் கொரோனா தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பெரியார்குளம் பகுதியில் சுகயீனம் காரணமாக வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் வவுனியாவில் கொரோனா தொற்றால் நேற்று மாத்திரம் 3 பெண்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.