வவுனியாவில் வனத்துறை நடவடிக்கையால் விவசாயிகள் அச்சம்

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Aug 15, 2025 11:53 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வனவளத்திணைக்களத்தின் அண்மைய செயற்ப்பாடுகளால் விவசாயிகள் அச்சநிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வனவளத்திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தாலும் வவுனியாவை பொறுத்தவரை அவ்வாறு எந்தகாணியும் விடுவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

உக்ரைன் போர் முடிவுக்காக ட்ரம்ப்–புடின் நேருக்கு நேர்

உக்ரைன் போர் முடிவுக்காக ட்ரம்ப்–புடின் நேருக்கு நேர்

பராமரிக்கப்படாத காணிகள்

அத்துடன் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத காணிகள் இனிமேல் மக்களுக்கு கிடைக்காது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் வனத்துறை நடவடிக்கையால் விவசாயிகள் அச்சம் | Vavuniya Farmers Fear Forest Dept Actions

இதனால் பொதுமக்கள் காடுகளாக இருக்கும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வனவளத்திணைக்களம் அந்த பணியை செய்ய தடை போடுகின்றது அவ்வாறு செய்பவர்களையும் கைது செய்கின்றது.

இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு மக்கள் தமது காணிகளை துப்புரவாக்குவது இதனால் விவசாயிகளும் மற்றும் மக்களும் அச்சநிலையில் உள்ளனர்.

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதில் ஆர்வம்: பாடகர் மனோ தெரிவிப்பு

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதில் ஆர்வம்: பாடகர் மனோ தெரிவிப்பு

சில காணி

இதற்கு ஒரு நீதியான முடிவினை அரசு வழங்க வேண்டும், சில காணிகளுக்குள் கிணறுகள் உள்ளது அவ்வாறான காணிகளையும் புணரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பவில்லை, அவர்களது வீடுகளை மூடி காடுகள் வளர்ந்துள்ளதுடன் அந்த காணிகள் தொடர்பாக கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கினாலும் வனவளத்திணைக்களம் அதனை ஏற்க மறுக்கின்றது.

வவுனியாவில் வனத்துறை நடவடிக்கையால் விவசாயிகள் அச்சம் | Vavuniya Farmers Fear Forest Dept Actions

பலர் காணிகளுக்கான அனுமதிபத்திரத்தையும் வைத்துள்ளனர் ஆனால் அது செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026