வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் கைது! நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல்துறையினர் அராஜகம்!!

Sri Lankan Tamils Hinduism Maha Shivratri Buddhism
By Eunice Ruth Mar 07, 2024 05:32 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை சிங்கள பௌத்தின் பெயரால் ஆக்கிரமிக்க இலங்கையின் முக்கிய பௌத்த கட்டமைப்புகள் முயற்சித்து வரும் நிலையில், வெடுக்குநாறி மலையில் உள்ள சிவாலயத்தில் நாளை இடம்பெறவுள்ள சிவராத்திரி பூசைகளை தடுக்க அடாவடியாக நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நகர்வுகளின் அடிப்படையில் இன்று மாலை, நாளைய பூசைகளுக்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளச் சென்ற பூசகர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேனி காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்திகளின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

நீண்ட வார இறுதி விடுமுறை : நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட தொடருந்து சேவைகள்

நீண்ட வார இறுதி விடுமுறை : நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட தொடருந்து சேவைகள்

  

சிவராத்திரி நிகழ்வுகள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வெடுக்குநாறிமலை ஆலயத்தின் சிவராத்திரி நிகழ்வுகளை தடுக்கும் வகையில் ஒரு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு சிறிலங்கா காவற்துறை தலைமையகத்துக்கு இன்று பௌத்த தகவல் மையத்தால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் கைது! நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல்துறையினர் அராஜகம்!! | Vedukunari Temple Maha Shivratri Buddhism Sl Tamil

இந்த நிலையில், குறித்த ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு தடையும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக, ஆலயத்தின் நிர்வாகத்தினர் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தனர். 

இதற்கமைய ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளுக்கு எந்தவொரு தடையும் ஏற்படுத்தப்படக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முன் ஆயத்த பணிகளுக்கு இடையூறு 

நீதிமன்ற உத்தரவுக்கமைய வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்ட முன் ஆயத்த பணிகளுக்கு காவல்துறையினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் கைது! நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல்துறையினர் அராஜகம்!! | Vedukunari Temple Maha Shivratri Buddhism Sl Tamil

இதனை தொடர்ந்து, பூசகர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நாளைய தினம் சிவராத்திரி வழிபாடுகள் நடத்தப்படுமென ஆலயத்தின் நிர்வாக குழு தெரிவித்துள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்! வலுக்கும் எதிர்ப்புக்கள்

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்! வலுக்கும் எதிர்ப்புக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025