வாகன இறக்குமதியில் முறைகேடு: அம்பலமாகும் உண்மைகள்
2022 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தவறான உற்பத்தி திகதிகளை பயன்படுத்தி நாட்டிற்கு இறக்குமதி செய்ய மூன்று ஜப்பானிய வாகன தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் கீழ், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும்போது, மூன்று ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை அரசாங்கம் விதித்துள்ளது.
எழுத்துப்பூர்வ அறிவிப்பு
இருப்பினும், ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களில் உற்பத்தி மாதம் குறிப்பிடப்படாததால், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு உற்பத்தி மாதமாகக் கருதப்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் அரசாங்கம் விதித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ஜப்பானில் உள்ள இலங்கை ஆட்டோமொபைல் சங்கம் (SLAAJ), ஒரு குறிப்பிட்ட நிறுவனம் 2022 இல் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக அந்நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டவிரோதம்
இதன்படி, இந்த வாரம் ஜப்பானில் இருந்து போலியான திகதிகளை பயன்படுத்தி சுமார் 150 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் உள்ள இலங்கை ஆட்டோமொபைல் சங்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த முறையில் செல்வாக்கு செலுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசாங்க விதிமுறைகளை மீறுவதாகும் என்று கூறியுள்ளது.
அத்தோடு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் உள்ளூர் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது என்றும், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
