ஜனாதிபதி பொதுமன்னிப்பில் முறைக்கேடு: முக்கிய அதிகாரி அதிரடி கைது!
வெசாக் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அனுராதபுர சிறைச்சாலையின் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று(08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025 வெசாக் காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதல்
அதன்போது, ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்படாத கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க பொதுமன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் ஒரு தண்டனை பெற்ற வங்கியாளர் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறை, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
