நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்குமாறு விஜய் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் வாக்களிக்க முடியாமல் தவிப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவரது இந்தக் கோரிக்கை வந்துள்ளது.
ஆணையம் உத்தரவிட வேண்டும்
சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி பேருந்து நிலையங்களில் தவித்து வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் எல்லோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் தமது ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்ற ஏதுவாக, வாக்குப்பதிவு நேரத்தை இன்று இரவு 8.00 மணி வரை (மேலதிகமாக 2 மணித்தியாலங்கள்) நீடிக்குமாறு அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |