கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!
பத்தரமுல்ல பகுதியில் போராட்டமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் சுகீஸ்வர பண்டார பிரதேசவாசிகளால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, சுகீஸ்வர பண்டாரா உள்ளிட்ட தரப்பினர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர்கள் ஹக்கர்களுக்கு சென்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சின் செயலாளரின் இல்லத்திற்கு முன்பதாக மேற்படி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குவிக்கப்பட்ட காவல்துறையினர்
இந்த நிலையில், குறித்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், அதனை கலைப்பதற்காக சாணத்தை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் பிரதேச வாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தப்பிச் சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |