வெடுக்குநாறி மலையில் தூண்டிவிடப்படும் தமிழ்மக்கள் : அமைச்சர் விதுர குற்றச்சாட்டு

Sri Lanka Police Sri Lanka
By Shalini Balachandran Mar 10, 2024 09:41 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன என்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் வெடுக்குநாறி மலையில் முன்னெடுக்கப்பட்ட சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் திருநாட்டின் நாகரீகம் சம்பந்தமாக பாதுகாக்கப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதனால் இதில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என்ற பேதங்கள் இல்லை.

இலங்கையின் புராதன நாகரீகம் சம்பந்தமான வரலாறுகளை நாம் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே பிரதான இலக்காக உள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் : காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் : காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை


வெடுக்குநாறி மலை

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலை உள்ளமையினால் இந்த பிரதேசமானது வனப்பரிபாலன திணைக்களத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ளது.

அத்தோடு வெடுக்குநாறி மலையானது தொல்பொருளியல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் வனபரிபால திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தண்ணீர் பவுசர் மற்றும் உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுசெல்வது சட்டத்திற்கு முரணானதாகும்.

வெடுக்குநாறி மலையில் தூண்டிவிடப்படும் தமிழ்மக்கள் : அமைச்சர் விதுர குற்றச்சாட்டு | Vithura Vikrama Talks About Vedukunari Issues

அதுமட்டுமன்றி அப்பகுதிகளில் பிரவேசிப்பதும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாகின்றமையால் உரிய அனுமதிகளைப் பெறாது அப்பகுதியில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு காவல்துறையினர் தமக்கு அதிகாரமளிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது முக்கியமான விடயமாகின்றது.

எந்தவொரு விடயங்களையும் கருத்தில் கொள்ளாது பொதுமக்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதாக இருந்தால் நாட்டில் எந்தவொரு சட்டங்களும் மற்றும் நீதிமன்றங்களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

வெடுக்குநாறி மலை விடயத்தில், அப்பாவி தமிழ் மக்களின் பின்னால் சில அரசியல் தரப்பினர் உள்ளமையால் அவர்களே தமிழ் மக்களை துண்டிவிட்டு முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

தமிழ் மக்கள்

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

தமிழ் மக்கள் அவ்விதமான தூண்டுதல்களுக்கு ஆளாவது போன்று பெரும்பான்மை சிங்கள மக்களும் மற்றும் பௌத்த மதகுருக்களும் அதற்கு பதிலளிப்பதற்கு தூண்டப்படுகின்றர்கள்.

ஆகவே, இரண்டு தரப்பிலும் தூண்டப்படுகின்ற தரப்பினர் குழப்பங்கள் ஏற்படுத்தி முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு வித்திடுவதுடன் இதில் அரசியல் தரப்பினர் தமது சுயலாபங்களை தேடிக்கொள்கின்றனர்.

வெடுக்குநாறி மலையில் தூண்டிவிடப்படும் தமிழ்மக்கள் : அமைச்சர் விதுர குற்றச்சாட்டு | Vithura Vikrama Talks About Vedukunari Issues

எனவே, இவ்விதமான நிகழ்வுகளை தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாதுள்ளமையினால் தொல்பொருளியலைப் பாதுகாப்பது தொடர்பாக உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்படும்.

அதேபோன்று தொல்பொருளியல் பகுதிகளாக அடையாளம் காணப்படும் பகுதிகள் பௌத்தத்துக்குரியனவா இல்லையா என்பது முக்கியமான விடயமல்ல அனைத்து தொல்பொருளியல் பகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

ஆகவே, இந்த விடயத்தில் இனக்குழுமங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் வெறுமனே அரசியல் குழுவினரே இலாபமீட்டுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024