ரி20 உலககிண்ணம்: இலங்கை அணிக்கு பேரிடி : முக்கிய வீரர் வெளியேற்றம்
தற்போது நடைபெற்றுவரும் 2026 ரி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் சகலதுறை வீர் வனிந்து ஹசரங்கா, கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் போது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்தால் வெளியேற்றப்பட்டார்.
இலங்கை அணியின்164 ஓட்டங்கள் என்ற அயர்லாந்தின் துரத்தலைத் தடுக்க நான்கு ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஓவரை முடித்த ஹசரங்கா, திங்களன்று எம்ஆர்ஐ ஸ்கான் எடுத்தார், அதில் அவரது இடது தொடை தசைநார் பகுதியில் கடுமையான கிழிவு இருப்பது தெரியவந்தது.
இலங்கை அணிக்கு பலத்த பின்னடைவு
ஐசிசி இன்னும் மாற்று வீரரை அங்கீகரிக்கவில்லை, ஆனால் ஹசரங்கவுக்கு பதிலாக சக லெக்ஸ்பின்-பந்து வீச்சு சகலதுறை வீரர் துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஹசரங்காவின் காயம் இலங்கை அணிக்கு பலத்த பின்னடைவாகும். இந்த வடிவத்தில் அவர் அணியின் மிகவும் திறமையான பந்து வீச்சாளர்.
இலங்கையின் இரண்டாவது குழு ஆட்டம் பெப்ரவரி 12 அன்று பல்லேகேலவில் ஓமானுக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து பெப்ரவரி 16 அன்று பல்லேகேலவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இறுதியாக பெப்ரவரி 19 அன்று கொழும்பில் சிம்பாப்வேக்கு எதிராகவும் விளையாடுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |