இந்திய காஷ்மீர் பகுதியில் மூண்டது மோதல்!
attack
indian
kashmir
By Vanan
இந்திய காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது.
இந்தச் செய்தி பதிவுக்கு வரும் வரையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெறுவதாகவும் சேத விபரங்கள் தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய காஷ்மீர் பிரதேசத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய படையினர் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும் பாகிஸ்தான் அதனை மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி