செங்கோலை விழுங்கினாலும் விசாரணையின் வேகம் குறையாது! நீதியமைச்சர் திட்டவட்டம்
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் செங்கோலைக் கைப்பற்றினாலும் அல்லது அதை விழுங்கினாலும், தற்போதைய நீதி அமைப்பில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கும் வேகம் குறையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (23.06.2026) இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், எதிர்க்கட்சிகளின் சீர்குலைந்த நடத்தைக்குப் பின்னால் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கான உண்மையான விருப்பம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக தங்களுக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்குகளைப் பற்றிய வலுவான அச்சமும் மிரட்டலுமே உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் விசாரணைகள் மற்றும் செவிமடுப்புகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இறுதி முடிவுகள் மற்றும் பெறப்படவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக மாறாத ஒரு கண்ணியமற்ற அரசியல் கலாச்சாரத்தைத் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியானது, தனக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்தும் குறுகிய நோக்கத்துடன், நாடாளுமன்றத்தில் பல்வேறு அவதூறான குற்றச்சாட்டுகளை எழுப்பி, செங்கோலைக் கையில் எடுக்கவும் முயற்சிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக தற்போது ஒரு கலந்துரையாடல் நடைபெற்று வருவதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
அரசின் கவனம்
மேலும், அதற்கு எதிராக முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்கள் மற்றும் வாதங்கள் மீதும் அரசின் கவனம் குவிந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு, மிகவும் பொருத்தமான முடிவை எட்டுவது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், தற்போதைய அரசாங்கம் அந்தச் செயல்முறையை முறையாகச் செய்து வருவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு பொதுமக்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆணையைத் தாம் எப்போதும் மதிப்பதாகக் கூறிய அமைச்சர், எதிர்வரும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அஞ்சுவதாலேயே எதிர்க்கட்சிகள் கற்பனை உலகில் வாழ்ந்து, ஆதாரமற்ற மற்றும் அபத்தமான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்