இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை
Sri Lankan Peoples
Sri Lanka Air Force
By Dilakshan
முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டி இலங்கை விமானப்படை (SLAF) ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விமானப்படை, உயர் பாதுகாப்பு மண்டலங்களில் அனுமதி இல்லாமல் ட்ரோன்களை இயக்கிய நபர்கள் மீது இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அறிவிப்பின் நோக்கம்
இந்த நிலையில், ட்ரோன்களைப் பறக்கவிட விரும்பும் எவரும் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் இயக்குபவர்களின் சட்டச் சிக்கல்களையும் சிரமங்களையும் தடுப்பதோடு, தேசியப் பாதுகாப்பைப் பேணுவதையும் இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |