விறகு சேகரிக்கச் சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டு
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
Sri Lanka Politician
By Nithusan
நுவரெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) பிற்பகல் விறகு சேகரிக்கச் சென்ற ஆறு இளைஞர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் விறகு சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து இளைஞர்களைக் கொட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்கான இளைஞர்கள் பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான குளவிக் கொட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.