கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான அறிவிப்பு
கொழும்பில் பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 8 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு 12, 13, 14 ஆம் மற்றும் 15 ஆம் பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்பதுடன் கொழும்பு 1 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைவான அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய கொழும்பு நீர் மற்றும் வடிகாலமைப்பு முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நீர் விநியோக கட்டமைப்பில் அத்தியாவசிய நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.