கம்பஹா வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
Gampaha
Sri Lanka
Sri Lankan Peoples
Water Cut
By Raghav
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைஅறிவித்துள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிலைம்
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறையாகும்.
காலை 8.30 முதல் மாலை 6.30 வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி