உடைப்பெடுத்தது சுத்திகரிப்பு நிலையம் : தடைப்பட்டது நீர் விநியோகம்
Colombo
Water Cut
By Kathirpriya
அம்பத்தலே சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளின் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, புறக்கோட்டை மற்றும் கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேலும், இந்த அடைப்பின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி