தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை

Sri Lankan Tamils Colombo Anura Kumara Dissanayaka May Day Tamil
By Raghav May 02, 2025 04:42 AM GMT
Report

தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்து எம்மை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) நேற்று (01.05.2025) நடைபெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. ஏனைய அரசியல் கட்சிகள் சூன்யமாக்கப்பட்டுள்ளன. 

பல்கலை மாணவனின் மரணத்தின் பின்னணி - எழும் கடும் அழுத்தங்கள்

பல்கலை மாணவனின் மரணத்தின் பின்னணி - எழும் கடும் அழுத்தங்கள்

அரசியல் அதிகாரம்

அரசியல் அதிகாரம் குடும்ப அலகில் இருந்தும், பரம்பரை அலகில் இருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பல அரசியல் தரப்பினரது அழுகுரல் கேட்கிறது.

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை | We Are Not Going To Ignore The Tamil People

நாட்டு மக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றார்கள் தற்போது ஆகஸ்ட், டிசெம்பர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

தோல்வி மற்றும் அச்சத்தின் வெளிப்பாடே இதுவாகும். ஆகவே அரசாங்கத்துக்கு பாரியதொரு சவால் ஏதும் கிடையாது. சூன்யமாக்கப்பட்டுள்ள தரப்பினர் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளார்கள்.

பிள்ளையான் கைதால் கலக்கத்தில் ரணில், ராஜபக்சாக்கள் :அம்பலப்படுத்தும் ரில்வின்

பிள்ளையான் கைதால் கலக்கத்தில் ரணில், ராஜபக்சாக்கள் :அம்பலப்படுத்தும் ரில்வின்

பொருளாதார மீட்சி

இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்.மக்களின் நம்பிக்கை என்ற பாரதூரமான பலம் எம்மிடம் உள்ளது.

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை | We Are Not Going To Ignore The Tamil People

வங்குரோத்து நிலையடைந்த நாட்டையும், சகல வழிகளிலும் பலவீனமடைந்த அரச நிர்வாக கட்டமைப்பையே நாங்கள் பொறுப்பேற்றோம். ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்கியுள்ளோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் தான் ஆறு மாத காலத்தில் பொருளாதார மீட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார்கள். 

பொருளாதார மீட்சிக்கான பொறுப்பை நாங்கள் மறக்கவில்லை. பிற தரப்புக்கு கையளிக்க போவதுமில்லை. நிலையான பொருளாதார மீட்சிக்கான அடித்தளமிட்டுள்ளோம்.

மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய தேசிய மக்கள் சக்தி அரசு : நாமல் ஆவேசம்

மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய தேசிய மக்கள் சக்தி அரசு : நாமல் ஆவேசம்

தமிழ் மக்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை | We Are Not Going To Ignore The Tamil People

ஆகவே தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம். 

ஆகவே இதனை செய்யாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தேசிய நல்லிணக்கம் பொருளாதார மீட்சிக்கான சிறந்த வழிகோலாகும்.” என தெரிவித்துள்ளார்.


பல்கலை மாணவனின் திடீர் மரணம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பின் பின்புலம்: சஜித் தரப்பின் குற்றச்சாட்டு

எரிபொருள் விலை குறைப்பின் பின்புலம்: சஜித் தரப்பின் குற்றச்சாட்டு

வடக்கு காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் இரகிய நகர்வு: ஆவேசத்தில் சுமந்திரன்

வடக்கு காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் இரகிய நகர்வு: ஆவேசத்தில் சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி