ராஜபக்சர்கள் அழித்தவற்றை ஒன்றாக இணைந்து கட்டியெழுப்புவோம் - சஜித் பிரேமதாச
ராஜபக்சர்கள் அழித்த எமது விவசாயத்தை ஒன்றாக இணைந்து கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று (2) தம்புள்ள நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர், தம்புள்ளையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் - அன்று நம் நாட்டு விவசாயிகள் நெற்செய்கை, காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை பயிரிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், இந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான மொட்டுத் திருடர்கள் தான் எனக் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “விவசாயம் செய்து வாழ்வாதாரம் பெற்ற மக்களை, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் முன்னோக்கி கொண்டுவந்து, நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைச்சலை அதிகரிக்க புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளைபயன்படுத்தி நவீன தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தப்பட்டு, நாட்டின் உணவு உற்பத்தியை உயர் மட்டத்திற்குகொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு பொருளாதாரப் புரட்சி தேவை. உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொழிற்சாலைகள் இங்கு நிறுவப்படவேண்டும்.
விவசாய பயிர் ஏற்றுமதி
விவசாயிகளைக் கொண்டு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரமல்லாது, தரமான விவசாய பயிர்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு நாட்டை கொண்டு வரவேண்டும்.
தற்போதுள்ள முறையில் உற்பத்தி குறைந்து, விவசாயிக்கு கிடைக்கும் பணத்தின் அளவும் குறைவடைவதால், இந்த நாட்டில் விவசாயிகள் வாழும் பிரதேசங்களில் அவர்களின் உற்பத்திப்பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும்” - என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்