நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன...! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் ,வாழ்விடங்கள் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டன.அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். சுமார் 5000 பேர் கொல்லப்பட்டார்கள்.
சிறையில் குட்டிமணி,தங்கத்துரை உட்பட்டோர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு பல சாட்சிகள் உண்டு.அந்த சம்பவத்துடன் தற்போது நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவத்தை ஒப்பிடமுடியாது.
இவ்வாறு தெரிவித்தார் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட். ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் "களம்" நிகழ்ச்சியில், அன்றைய காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளை வரலாற்று சான்றுகளுடன் அவர் விவரிக்கும் தகவல்கள் காணொளியில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |