காஷ்மீரை எப்போது மீட்டெடுக்கப் போகிறது இந்தியா?
இமயம் என்ற இயற்கை அரணும், எழில் கொஞ்சும் பனிப்பிரதேசமும் கொண்ட அழகிய இயற்கை பூமி காஷ்மீர் (Kashmir).
இயற்கை எழிலுக்குப் பேர் போன காஷ்மீர், அரசியல் ரீதியாக அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பகுதி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
போர், கலவரம், ஆக்கிரமிப்புச் சண்டை, சீண்டல், தீவிரவாதம், மதவாதத் தாக்குதல் என இரத்தம், ரணம், ரௌத்திரம் என்று சிவப்பு மையில் தன் வரலாற்றை வரைந்து வருகிறது காஷ்மீர்.
இந்த நிலையில் காஷ்மீர் இந்தியாவிற்கு (India) சொந்தம் என்றால், இந்தியாவிற்கு சொந்தமானது என்று கூறப்படுகின்ற காஷ்மீரின் பாரிய நிலப்பரப்பை ஏன் பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.
83,000 சதுர கிலோமீற்றர் கொண்ட பாரிய பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருப்பதற்கு ஏன் இந்தியா அனுமதிக்கிறது?
ஒன்று, இரண்டு வருடங்கள் அல்ல சுமார் 77 ஆண்டு காலமாக காஷ்மீரின் 33 சதவீதமான பிரதேசத்தை பாகிஸ்தான் தனதாக்கி வைத்திருக்கிறது.
உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்தால் ஏன் இதுவரை காலமும் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லை.
இப்பொழுது கூட பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது என்பதை காரணம் காட்டி இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொள்கிறதே தவிர காஷ்மீரை மீட்கப்போகிறோம் என்று கூறி வருகின்றதே தவிர பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டுள்ள இந்தியாவிற்கு சொந்தமான ஒரு பகுதியை மீட்கப்போகிறோம் என்ற காரணத்தை ஏன் இந்தியா ஒரு போதும் முன்வைப்பதில்லை....
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
