ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை
பாகிஸ்தானிய தூதர்கள் மூலமாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் புதிய அமைதித் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
இது ஒரு தனிப்பட்ட இராஜதந்திர நடவடிக்கை என்பதால் பகிரங்கமாக விவாதிக்க முடியாது என வாஷிங்டன் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை
ஈரானின் இந்தத் திட்டம் தொடர்பாக சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் வெள்ளை மாளிகையின் இந்த மௌனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகத் தொடர்பாளர் அன்னா கெல்லி (Anna Kelly) கருத்து தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர உரையாடல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் நடைபெறும் இராஜதந்திர உரையாடல்களை நாங்கள் விரிவாக விளக்குவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகத் தெளிவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவின் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |