இருவரில் யார் சரி..! பிரதமரா அமைச்சரா: மொட்டுக் கட்சி விளாசல்
சுப்ரீம்சட் செயற்கைக்கோள் திட்டத்துடன் தொடர்புடைய உண்மையான நிதி புள்ளிவிவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், செயற்கைக்கோள் திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் முரண்ட வகையிலான இரண்டு புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க நிதி
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “திட்டத்திலிருந்து வருவாயாக ரூ. 80,000 மில்லியன் பதிவானதா அல்லது ரூ. 300 மில்லியன் பதிவு செய்யப்பட்டதா? யார் சொல்வது சரி? பிரதமரா அல்லது அமைச்சரா?
அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதா, அது லாபத்தை ஈட்டித் தந்ததா என்பது மட்டுமே எனக்குத் தெரிய வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2022 அரகலய போராட்டத்தின் போது, பொதுமக்கள் “சிசி” (ரொஹித ராஜபக்ச) அரசாங்கப் பணத்தை ரொக்கெட் அனுப்பப் பயன்படுத்தினார்' என்று கூறும் பதாகைகளை வைத்திருந்ததையும் நாடாளுமன்ற உறுப்பினர் சானக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க இருவரும் தங்கள் உரைகளில் அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா
