ஏன் இடமாற்றப்பட்டார் சுதத் சமரவீர -பதிலேதும் தெரிவிக்காமல் நழுவிய சுகாதார அமைச்சர்
தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சுதத் சமரவீர ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் கேள்வியெழுப்பியவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றுள்ளார்.
டொக்டர் சுதத் சமரவீர நீண்ட காலமாக கொவிட் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த துல்லியமான தரவை வழங்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார், மேலும் அவரது பங்கு ஒரு சதி என்று விளக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த விஷயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் குறித்து எதுவும் கூறாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் பொறுப்பற்ற விதத்தில் வெளியிடப்பட்டுள்ளன என ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்தே அரசாங்கம் முடிவுகளை எடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தரவுகளை வெளியிடுவதில் பொறுப்பின்மை என்பது பாரதூரமான குற்றம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டதில் சதி உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.