ஏன் தாக்கப்பட்டார் விஜய் சேதுபதி- காரணம் கண்டுபிடிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பவர் ஸ்டார் புனித் ராஜ் குமாரின் மரணம் தொடர்பாக துக்கம் விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு செல்ல விஜய் சேதுபதி பெங்களூர் − தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றையதினம் இரவு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பின்பக்கத்தில் இருந்து வந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை தாக்க முயற்சித்திருந்தார். விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பயணித்த மகா காந்தி என்பவருக்கும் பயணியொருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விமானத்திலிருந்து இறங்கிய பின்பு வாக்குவாதத்தில் மீண்டும் இருவரும் ஈடுபட்டதுடன், அது மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்தில் இருவரும் சமரசத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் சேதுபதிக்கும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு கிடையாது எனவும், விஜய் சேதுபதியுடன் வந்த நபருக்கும் பயணியொருவருக்கும் இடையிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.