வெளிநாட்டு மோகத்தில் திருமணத்தை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை! கனடாவில் அரங்கேறிய துன்பியல் சம்பவம்

Sri Lankan Tamils Sri Lanka Canada
By pavan Oct 23, 2023 01:14 PM GMT
Report

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் காணப்படும் வெளிநாட்டு மோகம், சில தருணங்களில் உயிர்களே விடுமளவான துன்பியல் சம்பவங்களுக்கு வழிகோலி விடுகின்றது.

குறிப்பாக சட்டவிரோதமாக வெளிநாட்டு முகவர்கள் மூலம் சிலர் வெளிநாடு செல்கின்ற நிலையில், மேலும் சிலர் சட்டரீதியான திருமணத்தை கூட வெளிநாடு செல்வதற்கான கருவியாக பயன்படுத்தும் நிலைமைகள் தமிழர்கள் மத்தியில் சீர்கேடுகளுக்கு வழிகோலியுள்ளது.

கனடா வருவதற்காக தம்மை திருமணம் செய்து, ஏமாற்றியதாக கூறி யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியை சேர்ந்த தர்ஷிகா ஜெகநாதன் என்ற பெண்ணை கொலை செய்தமை தொடர்பாக அவரது கணவர் சசிகரன் தனபாலசிங்கம், கனேடிய நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

கனடாவில் குடியுரிமை பெறும் நோக்குடனேயே தர்ஷிகா ஜெகநாதன் தன்மை திருமணம் செய்துகொண்டாக சசிதரன் தனபாலசிங்கம் முன்வைத்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

ரொறண்ரோவின் ஸ்காபரோவில் பேரூந்தில் இருந்து இறக்கி, வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்த 27 வயதான மனைவியான தர்ஷிகா ஜெகநாதன் என்பவரை அவரது கணவரான சசிகரன் தனபாலசிங்கம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருந்தார்.

கனடாவில் குடியுரிமை பெறுவதற்காகவே

இந்த வழக்கில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கணவரான சசிகரன் தனபாலசிங்கம், குற்றவாளி என கடந்த மே மாதம் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் இருக்கும் சசிகரன் தனபாலசிங்கம் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பாளர் மூலம் இறுதியாக வழக்கில் கருத்து வெளியிட நீதிபதி வாய்ப்பை வழங்கியிருந்தார்.

வெளிநாட்டு மோகத்தில் திருமணத்தை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை! கனடாவில் அரங்கேறிய துன்பியல் சம்பவம் | Wife Used Marriage To Come To Canada

கனடாவில் குடியுரிமை பெறுவதை இலக்காக கொண்டு தர்ஷிகா ஜெகநாதன், தம்மை திருணம் செய்துகொண்டதாகவும் கிராமத்தை சேர்ந்த மனைவிக்கு நகரத்தில் பிறந்த தம்மை பிடிக்கவில்லை எனவும் சசிகரன் தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கு வருவதற்கு வசதியாக தர்ஷிகா ஜெகநாதன் திருமணத்தை பயன்படுத்திக் கொண்டதாகவும் தம்மை மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார் எனவும் குற்றவாளியான சசிகரன் தனபாலசிங்கம் கூறியுள்ளார்.

கொலை செய்த காணொளி

இதன்காரணமாகவே தாம் மது அருந்துவதற்கு ஆரம்பித்ததாகவும் குற்றாவளியான சசிகரன் தனபாலசிங்கம் கூறிய போது, அவரை நோக்கி நீதிபதி ஆன் மொல்லோய் கடும் தொனியில் விமர்சித்துள்ளார்.

ஏழைப் பெண்ணை வெட்டி கொலை செய்ததை காணொளியில் தாம் பார்த்ததாகவும் இது காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும் கூறியுள்ள நீதிபதி இதுபோன்ற விடயத்தை தாம் நேரில் பார்தத்தில்லை எனவும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மோகத்தில் திருமணத்தை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை! கனடாவில் அரங்கேறிய துன்பியல் சம்பவம் | Wife Used Marriage To Come To Canada

இதனையடுத்து குற்றவாளியான சசிகரன் தனபாலசிங்கத்திற்கு 25 ஆண்டுகள் சிறைவிடுப்பில் வெளிவர முடியாதவாறு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கனடாவின் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிக்கு இந்த தண்டனை தகுதியானது என கூறியுள்ள நீதிபதி ஆன் மொல்லோய், குற்றவாளியின் பரம்பரை அலகு தரவுகளை தேசிய மரபணு தரவு வங்கிக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025