தமிழர் தலைநகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம்: பிரதேச மக்கள் கவலை
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ஈச்ச நகரில் காட்டு யானைகள் தங்களது பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) )அதிகாலை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த காட்டு யானைகள் தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேளைகளில் வருவதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதம் விளைவித்து சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அந்தவகையில், சுமார் 15 க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இச் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களையும் தங்கள் உடைமைகளையும் காட்டு யானைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/a33ba429-2e6e-4861-9383-44b3fa189030/24-6676ecfdd9e69.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/87f72d20-974a-456f-ac6e-cdbae39512c3/24-6676ecfe4f7a7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5bbc1082-17d4-4240-b897-41a90aca5c15/24-6676ecfec1e2b.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)