ரணிலின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றுக்கு செல்வதற்கு ஆயத்தங்கள் ஏதும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து அதிகம் பேசப்பட்டு வருவது குறித்தும், அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஊடகவியலாளர்கள் ருவான் விஜேவர்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சரியான நேரம்
அதற்கு பதில் அளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.
எனினும், அத்தகைய ஆயத்தம் எதுவும் இல்லை என்றும் அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றால், சரியான நேரத்தில் செல்வார், தற்போது அத்தகைய கலந்துரையாடல்கள் எதுவும் இல்லை என ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
