கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்
srilanka
uthaya gammanpila
wimal
By Vasanth
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரண்டு அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் விரைவில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அதேவேளை ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அந்த ஊடகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவை அரசாங்கத்திலிருந்து நீக்கக் கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உதய கம்மன்பிலவை இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.