ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராக சாட்சியமளிக்க ஜெனிவாவில் களமிறங்கிய குழு!
geneva
srilanka army
witness
former fighter
By Sumithiran
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது 28 இலங்கை இராணுவ வீரர்கள் போர்க்குற்றங்கள் புரிந்ததாக சாட்சியமளிக்க 75 முன்னாள் விடுதலைப் புலிகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ள இந்த குழுவின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு தப்பி ஓடிய ஒரு குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா, முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவின் ஆதாரங்களை வழிநடத்துகிறார் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.