வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Sumithiran
வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுக்களை நாட்டிற்கு எடுத்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து நாட்டிற்கு வர முயற்சித்த போது அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்
காவல்றை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை கொண்டு வந்த உள்நாட்டில் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அவரிடமிருந்து ஜெலட்னம் வகையைச் சேர்ந்த 36800 சிகரெட்டுகள் அடங்கிய 184 காடன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி