வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர்

Colombo Sri Lanka Foreign Employment Bureau
By Jaso Nov 28, 2023 10:02 PM GMT
Report

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தஇலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக

ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர் | Woman In Oman Committed Suicide

அவர் தனது தாய், தந்தையருக்கு உதவியாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருப்பினும், திருமணமாகாத இந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் கூறுகையில், அவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் வலிமை இல்லை என தெரிவித்தனர்.

இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...!

இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...!

போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நிகவெரட்டிய கொட்டாஹெர ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் மற்றும் ஒருவர் ஊடாக சுற்றுலா வீசா பெற்றுக்கொடுத்து இந்த பெண் மோசடியான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

போலி ஆவணம் தயாரித்து சுற்றுலா விசாவில் 

கடந்த கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்து இந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி ஓமானுக்கு வேலைக்குச் சென்றதன் பின்னரே இந்த துரதிர்ஷ்டவசமான கதியை அவர் எதிர்கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர் | Woman In Oman Committed Suicide

திருமணமாகாத இப்பெண்ணை போலி ஆவணம் தயாரித்து சுற்றுலா விசாவில் வீட்டு வேலையாளியாக ஓமான் நாட்டுக்கு அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஓமானில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய பெண் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பின் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

சித்தங்கேணி இளைஞன் படுகொலை : காவல்துறையின் சித்திரவதை கூடம் கண்டுபிடிப்பு (காணொளி)

சித்தங்கேணி இளைஞன் படுகொலை : காவல்துறையின் சித்திரவதை கூடம் கண்டுபிடிப்பு (காணொளி)

அதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், அவர் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்