தமிழர் பகுதியில் கொடூரம் - யானை தாக்கி இளம் தாய் பலி - உயிர் தப்பிய 3 வயது குழந்தை
மட்டக்களப்பில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று (04) இரவு மட்டக்களப்பு (Battialoa) ஆயித்தியமலை - மகிழவெட்டுவான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிர் தப்பிய குழந்தை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ளார்.
இந்நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்களை தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளது.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
