யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Drugs
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (19.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்புக்கு பொறுப்பாகவுள்ள காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
